Sunday 29 June 2014

மலச்சிக்கல் மருந்து constipation மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

 
1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.

2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை  சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.

3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.

சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :     
1- கடுக்காய் -       விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவம்

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.    


சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.


இளைத்தவனுக்கு  எள்ளு,
கொழுத்தவனுக்கு  கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.  


தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம் 
தேற்றான் கொட்டை லேகியம்.


இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.
link 

சுக்கு கடுக்காய் இஞ்சி உண்ணும் முறை

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசி குலாவி 
நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய் 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

பழமொழி : 
கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.
 
link 

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.

   செய்முறை :
 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் 
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல் 
தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் 
காப்பாற்றும்.

நன்றி...!

Dr.அரவின் தீபன்...

aravindeepan@gmail.com
siddha maruththuvam kelvi pathil kulu-facebook
Siththamaruththuvavilakkam.blogspot.in

Saturday 28 June 2014

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?


நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று http:// www.wintechmobil es.com/tools/ huawei-code-calc ulator/, உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்

Thursday 26 June 2014

குமரிக்கண்டம்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".
ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.
இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
வரலாற்று தேடல் தொடரும்....!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!

கரிசலாங்கண்ணி

இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.


    கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
    கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
    கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
    கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்கு குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப் பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்
    மஞ்சள் காமாலைமுதல் அனைத்து வகை காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
    கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
    கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
    குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கதிற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.
    பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.
    குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
    கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
    இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.
    கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.
    கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
    கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும்.
    கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
    கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.
    கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.
    புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்தி கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.
    கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்

Tuesday 24 June 2014

ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?


ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.
ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?
அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன?
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன?
இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா?
போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு.
சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.
ஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன?
ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.

தவிர்க்க கூடாத 10 உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.
 

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு: 


வெள்ளைப் பூண்டுகிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன.
குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க புகழ் மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.

ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.

காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டி விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த் தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்து விடலாம்.

பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப் பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்

Sunday 22 June 2014

கணினியில் ஜாவா மொழி படிக்கலாம்

கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.


 இணையதள முகவரி : http://www.good-tutorials.com




CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும் திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்

கணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. இதுபோன்ற நிலையில் நாம் இதழ்களை படிக்க வேண்டுமெனில் ஒன்று நூலகத்திலோ அல்லது நண்பர்களிடம் கடனாகவோ வாங்கிதான் படிக்க வேண்டும். சில நேரங்களில் இவை சாத்தியமாகும் ஆனால் இவை எப்போதும் நடப்பது சாத்தியமற்றது. இது போன்ற நிலையில் நாம் என்ன செய்யலாம் என்றால் இணையத்தின் உதவியுடன் அனைத்து விதமான மின் புத்தகங்களையும் இலவசமாக  தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.  அதற்கு பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. 

     கணினி துறை சார்ந்த மின்புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான மின்புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் இலவசமாக தரவிறக்கம் செய்வதால் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டி வரும். அதாவது 1 மணி நேரத்திற்கு ஒரு பதிவிறக்கம், வேகம் குறைவான பதிவிறக்கம் போன்று, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமை போன்ற ஒரு சில பிரச்சினைகள் எழுக்கூடும். எனினும் குறிப்பிட்ட சில தொகையை செலுத்தினால் மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. 

     பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்ய முடியாதோர் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சிறந்த முதன்மையான ஐந்து தளங்கள்.

1)PDF giant

     இந்த தளத்திலிருந்து ஆங்கிலம், ப்ரென்ஞ், இத்தாலி, ஜெர்மன் போன்ற மின் இதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  இந்த தளத்தில் பயனர் வசதிகேற்ப வகைப்படுத்த பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பயனர்கள் இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

2)Magazines Download - All in PDF

    இந்த தளத்தின் சிறப்பே வகைவாரியாக வரிசைப்படுத்தி உள்ளதுதான், மேலும் புத்தகங்களை அவ்வபோது பதிவேற்றம் செய்து கொண்டே இருப்பர்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

3)Magazine Time

     அன்மை மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய உதவுகிறது, மற்ற தளங்களில் உள்ளது போன்றே இந்த தளத்திலும் உள்ளது. வகைகள் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டிகள் அனைத்தும்.
கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

4)WorldMags

     சிறப்பான தளம் கணினி மின்புத்தகங்களும் மற்ற மின் புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

5)PremioMag

     இலவசமாக மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மற்றுமொரு தளம், நன்றாக உள்ளது பயன்படுத்தி பார்க்கவும்.
கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி
மேலும் இந்த தளங்கள் போன்றே இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இவையாவும் மின் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் வார இதழ்கள் மற்றும் நாவல்கள்

ஆங்கில மின் புத்தகங்களை மட்டும் தான தமிழ் மின்புத்தகங்கள் இல்லையா என்றால் உண்டு ஆனால், கணினி மின்புத்தகங்கள் இல்லை. வார இதழ்களான குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழ் வார இதழ்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி
இந்த தளத்தில் அன்மையில் வெளியாகும், இதழ்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருப்பர் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் பல நாவல்கள் உள்ளன. அதையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
 
link 

தமிழ்

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கி. மு. 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
  • சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
  • மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
  • தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

 

தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்:
  • தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ்- மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
  • தமிழ்-குடகு மொழிகள்: தமிழ்- குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
  • தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ்- கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
  • திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.

சொற்பிறப்பு

 

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முதன்மையானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
link 

 



சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம்

சூரிய மண்டலத்தில் இருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகச் சிறிய கிரகம் இது தான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கிரகம் கிலிசி 876 என்ற அதன் தாய்க் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த இரு கிரகங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 20 லட்சம் மைல்கள். பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல் ஆகும். இந்த கிரகம் பூமியைப் போல் ஏழரை மடங்கு பெரியது.

பூமியில் இருந்து 15 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கிரகம் உள்ளது. பூமியைப்போல இந்த கிரகத்திலும் மலைகள் உள்ளன. ஆனால் உயிரினங்கள் வசிக்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு மிக மிக வெப்பமாக உள்ளது. இந்தப்புதிய கிரகம் 400 முதல் 750 டிகிரி வெப்பம் உடையது. அங்கு உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்.

ஜூபிடர் கிரகத்தில் இருப்பது போல் அங்கு வாயுக்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
link 

Saturday 21 June 2014

சமய நூல்கள்

4.4 சமய நூல்கள்
சமய நூல்கள் தனிச்சிறப்புடையவை. அவற்றை மொழிபெயர்ப்பது அரிய செயல். அதைப்பற்றிப் பார்க்கலாம்.
4.4.1 பைபிள் மொழிபெயர்ப்பு
அமேசான் ஆற்றோரத்தில் ஒருவன் காணுகின்ற கனவுகள் காவிரிக்கரையோரத்தில் இருக்கும் ஒருவனுக்கும் புலனாகும் வண்ணம் மாற்றப்படும் சிந்தனையே மொழிபெயர்ப்பு என்பதை நாம் உணரலாம். இந்நிலையில் கீழை நாகரிகத் தொட்டிலில் தோன்றிய பல சமயங்கள் குறிப்பாகச் சைவ, வைணவ, சமண, பௌத்த சமயச் சாரங்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளையும் எட்டியுள்ளதென்றால் சமய வழிபாட்டு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு இதில் பேரிடம் வகிக்கிறது. ஆசியா கண்டம்தான் சமயத் தோற்றச் சிறப்பிடம் என்பது உலகேற்கும் உண்மை. பொருளை உணர்த்துகின்ற நிலை நோக்கமாக அமையும் பொழுது மொழிபெயர்ப்பானது மொழிகளின் வேற்றுமைகளை மறைத்து விடுகிறது. இந்த உண்மை சமயநூல் மொழிபெயர்ப்பில் நூற்றுக்கு நூறு பொருந்தும். இந்நிலையில் கீழை ஆசியநாட்டில் தோன்றிய கிறித்தவ சமய நூலான பைபிள் என்னும் விவிலியம் மொழிபெயர்ப்பில் முன்னிடம் பெறுகிறது. பலநூறு மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ள விவிலியம் பக்தியின் மொழியான தமிழில் 1714 இல் முதல் தோற்றம் கண்டது. தமிழில் வெளிவந்த முதல் மூன்று மொழிபெயர்ப்புக்களையும் ஜெர்மானியர்கள் செய்தனர் என்று அறிகிறோம்.

• முதல் மொழிபெயர்ப்பு
இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்கு என்பவரால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜான் பிலிப் பெப்ரீசியஸ் என்பவராலும் பின்னர் இரேனியஸ் என்பவராலும் (1833 இல்) மொழிபெயர்க்கப்பட்டன. இதற்குப் பின்னர் அமெரிக்கரான பீட்டர் பெர்சிவல் இலங்கை, இந்தியா என்ற இரு இடங்களிலும் (யாழ்ப்பாணம், சென்னை) இருந்து 1848 இல் பணியை நிறைவு செய்தார். பிரஞ்சு தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் தோன்றிய பவர் ஐயர் 1871 இல் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்தார். தொடர்ந்து லார்சன் 1936 இலும் மோனகன் 1954 இலும் மொழி பெயர்த்தனர்.
• தமிழரின் மொழிபெயர்ப்பு
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட டி. இராஜரீகம் என்பவர் அவருக்கு முன்னர் வந்த பைபிள் மொழி பெயர்ப்புகளில் காணப்படும் புரியாத சொற்களை நீக்கி, தூய தமிழாக்கிய பெருமை பெற்றார். திருத்த முறைக் கிறித்தவ மொழிநடை, கத்தோலிக்கக் கிறித்தவ மொழிநடை என்ற பாகுபாட்டுக்குள் கிடந்த பைபிள் மொழிபெயர்ப்பு பொது மொழிபெயர்ப்பு என்ற நிலையில் ஒருங்கிணைந்த ஒரு குழுவினரால் செய்யப்பட்டுத் திருத்தம் பெற்றது. இன்னும் இப்பணி தொடர்ந்து கொண்டு வருகிறது.
4.4.2 காப்பிய மொழிபெயர்ப்பும் புராண மொழிபெயர்ப்பும்
இராமாயண மொழிபெயர்ப்புகள் பல எழுந்துள்ளன எனினும் அது இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற நிலையில் கூறப்பட இருப்பதால், இப்போது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத மொழிபெயர்ப்பு இங்கே கருதப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் இராமாயணக் கதைகளைவிட மகாபாரதக் கதைக் குறிப்புகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. அதிகக் கிளைக் கதைகளைக் கொண்டு வடமொழியில் இயற்றப்பட்ட மகாபாரதக் கதை தமிழில் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் என்ற சின்னமனூர்ச் செப்பேட்டுச் சொல்லால் கடைச் சங்க இலக்கிய காலத்துக்கு முன்னரே மொழிபெயர்க்கப்பட்ட நிலையை அறிகிறோம். பின்னர் மூன்றாவது நந்திவர்மன் காலத்தில் பெருந்தேவனார் என்னும் புலவர் வடமொழி பாரதத்தைத் தழுவி பாரத வெண்பா என்ற நூல் ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளமை அறிகிறோம். ஆனால் இன்று அது முழுமையாக அன்றிச் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வார் வேதவியாசருடைய வடமொழி மகாபாரதத்தைத் தமிழில் சுவை மிகுந்த இலக்கியமாக இயற்றியுள்ளார். இந்நூலில் 10 பருவங்களில் 4375 பாடல்கள் உள்ளன. கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அட்டாவதானம் அரங்க நாதக் கவிராயர் விருத்தப்பாக்களில் வில்லிபாரதத்தை நிறைவு செய்து பாடி வைத்தார்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நல்லாப்பிள்ளை எனும் புலவர் 7000க்கு மேற்பட்ட செய்யுள்களால் விரிவான பாரதத்தைத் தமிழில் எழுதித் தந்தார். மகாபாரதக் கிளைக் கதைகள் பல. அவற்றுள் நளனைப் பற்றிய வரலாற்றைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் நளவெண்பா என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடினார். கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேவராசப்பிள்ளை என்பவர் குசேலோபாக்கியானம் என்னும் நூலையும், பாரதியார் பாஞ்சாலி சபதம் என்ற தழுவல் காப்பியத்தையும் தமிழில் தந்துள்ளனர்.
4.4.3 பகவத்கீதை மொழிபெயர்ப்பு
அடுத்தபடியாக, பகவத்கீதை மொழிபெயர்ப்பும் தமிழில் வழிவழிச் சிறப்புப் பெறுகிறது. வடமொழி மகாபாரதத்தில் போரின் பொழுதுதான் உறவினர்களைக் கண்டு தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, அறிவுறுத்தி, செயல்படத் தூண்டிய கண்ணனது அறிவுரைப்பகுதிதான் கீதை. ஸ்ரீமத் பகவத்கீதை என வடமொழியில் கூறப்படும் நூல்தான் இது. இசையோடு பாடப்படும் தன்மை உடையதாக அமைந்துள்ளது.
பகவானால் அருளப்பட்ட திருநூல் என்பதைவிடப் புனித இசைப் பாடல்களைக் கொண்ட இசைத் திருநூல் (Song celestial) என்ற பொருளிலேயே இந்நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது என்றும், இது தமிழில் 12 மொழிபெயர்ப்புகளையும், ஆங்கிலத்தில் 27 மொழிபெயர்ப்புகளையும் கொண்டு விளங்குகிறது என்றும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்கள் கருத்தளித்துள்ளார். திருமதி. மு. வளர்மதி அவர்களின் மொழிபெயர்ப்புக்கலை என்ற நூலின் 74-76 என்ற பக்கங்களில் அவர் அளித்துள்ள பட்டியலின் வாயிலாகக் காண்கின்ற பொழுது கீதையின் 14 மொழிபெயர்ப்புகள் பல்வேறு காலங்களில் தமிழில் வெளியிடப் பட்டுள்ளமையை நம்மால் அறிய முடிகிறது.

link 

வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.

உங்கள் வீடுகளில் அல்லது தெரிந்தவர் வீடுகளில் வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்கள் இருக்கிறார்களா...? இந்தப் பதிவைப் படியுங்கள்.
என் தோழி இளம் மருத்துவர். அவள் கடந்த சில மாத காலமாக குழந்தைகள் பிரசவிக்கும் பிரிவில் பணி செய்கிறாள். அவள் சொன்னதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

அவள் அங்கே இருந்த நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாகவும் இரண்டு குழந்தைகள் குறைமாத குழந்தையாகவும் தான் பிறக்கின்றனவாம்.
அவள், “பொதுவாக மருத்துவர்கள் 25 வாரத்திற்கு மேல் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவிற்கு மருத்துவம் செய்து காப்பாற்றுவார்கள்.
25 வாரத்திற்குள் குழந்தை வெளியாகிவிட்டால் அந்த குழந்தைக்கு எந்த மருத்துவமும் பார்க்காமல் உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள். பொதுவாக 25 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். அப்படியே காப்பாற்றினாலும் அக்குழந்தைகள் ஊனமுள்ள குழந்தையாகத்தான் இருக்குமாம்.
தவிர போன வாரத்தில் நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்துவிட்டது. அந்தப் பெண் அழுது கேட்டுக்கொண்டற்கு இணங்க, மருத்துவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். பிறந்த போதே குழந்தை மூச்சிவிட சிரமப்பட்டதால் அந்த 900 கிராமே உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் இணைத்து மூன்று நாட்கள் வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதன் துடிப்பு மெல்ல மெல்ல அடங்க அந்தப் பெண்ணிடம், “இனி எங்களால் காப்பாற்ற முடியாது“ என்று சொல்லவும் அந்த பெண் “என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள். நான் காப்பாற்றிக் கொள்கிறேன்“ என்று அழுதாள்.
மருத்துவர், “உங்களின் குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் இறந்து விடும். ஆனால் வேறு வழியில்லாமல் நாங்கள் அதை எடுக்கத் தான் வேண்டியுள்ளது“ என்று சொல்லவும், அந்தப் பெண் “என் எதிரிலேயே எடுங்கள்“ என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றிருந்தாள்.
ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் அந்தக் குழந்தை இரண்டு நிமிடத்திலேயே இறந்து விட்டது. பாவம் அந்தப் பெண் கதறி அழதாள்“ என்று என் தோழி சொன்னாள்.
எனக்கும் கவலையாக இருந்தது. இருந்தாலும் நான், “நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஏன் ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்தது.?“ என்று கேட்டேன்.
“அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கருப்பை வலுவில்லாமல் இருந்தது. அவளுடைய டாக்டர் அதிக வேலைகள் செய்யாமல், வெயிட்டான பொருட்கள் எதையும் தூக்காமல் முடிந்தவரையில் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் எப்படி இருந்தாளோ.... இப்படி ஆகி விட்டது. தவிர இப்போது இருக்கும் பெண்களுக்கு முதல் முறையிலேயே கரு தங்குவது இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வெளியாகி விட்டு தான் கருவே தங்குகிறது.“ என்றாள்.
இதைக் கேட்டதும் எனக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.
பெற்றோர்களே.... ஏன் இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படியாகிறது என்று யோசித்தால், பெண்களின் கருபப்பை வலு இல்லாமல் இருப்பது தான் காரணம் என்பது நமக்கே புரிந்து கொள்ள முடியும்.
நான் பெரிய பெண்ணாகி வீட்டிற்குள்ளேயே இருந்த பதினொரு நாளும் காலையில் எழுந்ததும் இரண்டு நாட்டு கோழி முட்டையை உடைத்து எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பச்சையாகவே வாயில் ஊற்றுவார்கள். பிறகு திரும்பவும் உடைத்த அதே இரண்டு முட்டை அளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்வார்கள்.
அதன் பிறகு நிறைய நெய் ஊற்றி செய்த உளுந்து களியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பாட்டுடன் இந்த மூன்றையும் நிச்சயம் பதினொரு நாளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொடுப்பார்கள். (ஏன்டா நாம் பெரியபெண் ஆனோம் என்று இருந்தது) இருந்தாலும் சில நாட்கள் சாப்பிட்டேன்.
ஆனால் இப்போது இருக்கும் பெண் பிள்ளைகள் அதையெல்லாம் சாப்பிடுவதை மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தவிர இங்கே வயதுக்கு வந்த விசயத்தைக் கூட தன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது இல்லையாம்.
பெற்றோர்கள் (நம்மவர்களே) “இப்போது இருக்கும் குழந்தைகள் நிறைய செர்லக்ஸ் சாப்பிடுகிறார்கள். அதிலேயே எல்லா சத்தும் இருக்கிறதே“ என்று அலட்சியமாக சொல்கிறார்கள். இது தவறு.
ஒரு பெண் பூப்படைந்த நாட்களில் அவளின் கருப்பைக்கும் உடலுக்கும் போஷாக்கான உணவைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தைபிறக்கும் பொழுது ஏற்படும் பிரட்சனைகள் குறையும்.
பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுங்கள்.
link 

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத 6 நோய்கள் !!

வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். சொல்லப்போனால், உண்மையான பலம் உண்மையை மறைப்பதால் வருவதில்லை.
உண்மையை சந்திப்பதால் மட்டுமே கிடைக்கும். ஆகவே மருத்துவரிடம் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ள படி கூறி, நீண்ட ஆயுளை பெற்று 100 வருடங்களுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். இப்போது மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத சில நோய்களைப் பார்ப்போம்….
நாசியழற்சியின் அறிகுறிகளை பார்க்கும் போது சாதாரண அழற்சியின் அறிகுறிகளை போலத் தான் இருக்கும். இதனை அறியாமல் மருத்துவர் அதற்குண்டான வைத்தியத்தை பார்க்காமல், வேறு சிகிச்சையை அளித்து வந்தால் நிலைமை மோசமாகத் தான் செய்யும். மேலும் பிரச்சனைக்கான அறிகுறிகளை மருத்துவரிடம் மறைப்பதாலும், இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு. வாசனை திரவியம், சில உணவுகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு நாசி அடைப்பு, கண்ணில் நீர் வழிதல், தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் முதல் வேலையாக முறையான அலர்ஜி சோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.
உடற்குழி நோய் என்ற உடல்நல கோளாறு, செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். சிலருக்கு க்ளுடென் (Gluten) உட்கொள்வதால் இப்பிரச்சனை அதிகரிக்கும். இந்த நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்து, உடலில் போய் சேர்வதில்லை. அதற்கு காரணம் அவர்களின் சிறுகுடல் பாதிப்படைந்திருப்பதே ஆகும். வயிற்றுப் போக்கு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், மலச்சிக்கல் போன்றவைகளே இதற்கான அறிகுறிகள். ஆகவே இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் கண்டறிவது கஷ்டமாகிவிடும்.
தைராய்டு ஒழுங்கின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் சந்திக்கும் பிரச்சனை நெஞ்சு வலியும், நெஞ்சு படபடப்பும் தான். இது போக ஆக்கச்சிதைவு ஒழுங்கின்மை, தசைகள் மற்றும் மூட்டு வலி மற்றும் வளர்ச்சி பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மருத்துவரும் சரி நோயாளிகளும் சரி, தைராய்டு பிரச்சனையை மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் அறிகுறிகளை சளிக்கான அறிகுறிகள் என்று பெரிய தவறை மருத்துவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. கொடிய அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள். ஒவ்வொரு நோயாளிகளை பொறுத்து மாறுபடும். பசியின்மை, அதிகப்படியான வியர்வை, கடும் காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை புற்றுநோய் ஏற்படுத்தும். புற்றுநோயால் அவதிப்படுபவர் அதனை கவனிக்காமல் விடும் போது, அதிக அளவில் எடை குறைவும் ஏற்படும்.
ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது மரணம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் ஆபத்து வருவது அனைவரும் அறிந்ததே. தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் சோர்வு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படும். இவை அனைத்தும் இதற்கான அறிகுறிகள் ஆகும். இதை பொதுவாக மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனை ஏற்படும் போது, முதுகு தண்டு வீங்கும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிப்படையும். சொறி, காய்ச்சல், இறுகிய கழுத்து என்பதே இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் சளிக்கானது என்று தவறாக நினைக்க வைக்கும். இது மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை தவறாக புரிந்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, உங்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவியுங்கள். உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு பிடிப்பு ஏற்படவில்லை என்றால், மற்றொரு மருத்துவரை பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

Thursday 19 June 2014

கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்



தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
>>வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.
>> வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.
>> நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.
>> நம்மை இருட்டிலும் அடையாளம் பார்த்துக் கடிக்கும் திறன் கொசுக்களுக்கு உண்டு. எனவே, வேறு வாசனை வரும் திரவியங்களை நம் உடலில் பூசிக்கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.
>> பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.
>> விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதை நாமும் பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.
>> கொசுவை ஒழிக்க ஜன்னல்களில் கொசுவலையை மாட்டிவிடலாம். கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனே அடைத்துவிடுவது நல்லது.
பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஒரு கொசுவத்தி எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.

ATM ஏ டி எம் ல் பணம் வராமல் இருந்தால் குற்றங்களை பதிவு செய்ய இணையதளம்


இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் “ஒபட்சு மேன்” { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் ****/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் “ஒபட்சு மேன்” { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் ****/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் ***/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் “ஒபட்சுமேன் { Ombudsman }
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு “ஒபட்சு மேன்” க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு “ஒபட்சு மேன்” அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை