Thursday 26 March 2015

சாதமும் உருளைக்கிழங்கும்











குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில், அரிசியில் இருக்கும் அதே கார்போஹைட்ரேட் தான் உருளையிலும் இருக்கிறது. எனவே, அரிசி உணவு சாப்பிடும்போது, உருளைக்கிழங்கு நமக்குத் தேவையில்லை. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சாம்பார் சாதத்துக்கு உருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து விரும்பி சாப்பிடுகிறோம். அரிசி உணவே இல்லாத சமயத்தில் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் உருளைக்கிழங்கை வேகவைத்துதான் உண்ணவேண்டும்.
எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து இல்லாததால், இரவில் சாப்பிடக்கூடாது. ஆனால், இதனுட‌ன் நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

Sunday 22 March 2015

மருத்துவ குணங்கள் முல்லைப் பூ

முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.
முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

Saturday 21 March 2015

எச்சரிக்கை மழை நீரை சேமிக்காவிட்டால்

எச்சரிக்கை மழை நீரை சேமிக்காவிட்டால்
நீரின்றி அமையாது உலகு., இன்று உலக தண்ணிர் தினம்... மழை நீரை சேமிப்போம்

Wednesday 4 March 2015

வைட்டமின் சி அதிகம் உள்ள உடலுக்கு நன்மை பயக்கும் பச்சைப்பட்டாணி


பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு.
100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது. பட்டாணியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அவசியம்.
ஃபோலேட் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது. பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி நிறைய உள்ளது. பட்டாணியில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் (Phytosterols), உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
பான்டோதெனிக் அமிலம், நியாசின், தயாமின் மற்றும் பைரிடாக்சின் ஆகிய பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கால்சியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, துத்தநாகச் சத்து மற்றும் மாங்கனீஸ் சத்துகளையும் உள்ளடக்கியது பட்டாணி.
முளை கட்டிய பட்டாணி இன்னும் சத்தானது. தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்

வாட்ஸ்ஆப் - ல் பேசும் வாய்ஸ் கால் பேசும் வசதி Whats App Voice Call

 
 
வாட்ஸ்ஆப் (Whats app) காலிங் சேவை(Call Service)  பல வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் வழங்க துவங்கி இருக்கின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம்(Users) சோதனை செய்யப்பட்டு வந்த இந்த சேவையானது ஐபோன்(I Phone) மற்றும்
விண்டோஸ்(Windows) போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்ட பின் வாட்ஸ்ஆபு் கான்டாக்ட்களுக்கு வாய்ஸ் கால் செய்ய தனி ஸ்கிரீனும், சாட் விண்டோ காலிங் பட்டன் Calling Button ஒன்றையும் காண்பிக்கின்றது. ஆக்டிவ் கால் ஸ்கிரீனில்Screen லவுட் ஸ்பீக்கர், சாட் விண்டோ மற்றும் ம்யூட் செய்ய தனித்தனியே பட்டன்கள் இருக்கின்றது
 ஆன்டிராய்டு(Android) இயங்குதளங்களின் மூலம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலருக்கும் வாய்ஸ் கால் சேவை செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே வாய்ஸ் கால் சேவையை(Voice Call Service) வைத்திருப்பவர் மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த சேவை அனைவருக்கும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை

 தற்போது வரை ஆன்டிராய்டுAndroid  மற்றும் ப்ளாக்பெரி பயனாளிகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது இந்த சேவை ஆக்டிவேட்Activate  ஆகின்றது, என்றாலும் ஒருவரால் இத்தனை பேருக்கு மட்டும் தான் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று வாட்ஸ்ஆப்(Whats App)  வரையறுத்துள்ளதாகவும் தெரிகின்றது.

பசுக்கள் மீது இரக்கம் காட்டுவது அவசியமான ஒன்று


பசு ஒரு சாதுவான விலங்கு.அது புல்லை திண்ணும் அல்லது காகிதத்தை தின்னும்! பசு வலிமை குன்றிய மிருகம் கிடையாது.எந்த பசுவும் தனக்கு புல் வேண்டும்,புண்ணாக்கு வேண்டும் என்று மனிதனிடம் கேட்டது கிடையாது.சுதந்திரமாக எங்கோ திரிந்துகொண்டிருந்த விலங்கை பிடித்து,அடிமையாக்கிக்கொண்டு வீட்டு விலங்கு என பெயர் சூட்டியிருப்பது அபத்தமானது.அதை விட அதன் பாலை வன்முறையால் அதனிடமிருந்து கறந்து கூறுபோட்டு பாலித்தின் பாக்கெட்டில் அடைத்து விற்பது கொடுமையானது.இதே போன்று மனிதனிடருந்து எந்த உயிரினமாவது பாலை அபாண்டமாக கவர்ந்து சென்றால் எப்படியிருக்கும்? அதேபோன்றுதான் பசுவிற்கும் இருக்கும்!

ஒரு உயிரை மனிதன் தனது தேவைக்காக கொன்று திண்பது தவறுதான்.அதேவேளையில் அடிமைபடுத்தி தனது கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு,கயிறு போட்டு கட்டி வைத்து கொடுமைபடுத்துவதும் தவறுதான்!
நன்மை செய்யும் விலங்கை நம் தேவைக்கு பயன்படுத்தி விட்டு அதை அடிமாட்டு விலைக்கு விற்பது கொடுமை

Monday 2 March 2015

பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ் நோய் அறிகுறிகள்


உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.
விளைவுகள்: கர்ப்பத்தின் துவக்கத்திலேயே, குறைந்தபட்சம் மூன்று முறையாவது, கரு தங்காமல் கலைந்துவிடும்.
கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு வகை சர்க்கரை நோய். இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. குழந்தை பிறந்த பின், இந்த நோய் மறைந்து விடும். ஒரு சிலருக்கு தொடர வாய்ப்புள்ளது.
ரத்த அழுத்தம் அதிகரிப்பு: தாயின், 20வது வார கர்ப்பகாலத்தில் திடீரென ரத்த அழுத்தம் உயர்வதால், தாயின் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் மூளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சிசேரியன் பிரசவம்: பி.சி.ஓ.எஸ்., உள்ள கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு முன், ஒழுங்கற்ற மாதவிடாய், முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனே ஒரு நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
பரிசோதனை செய்து, பி.சி.ஓ.எஸ்., இருப்பது உறுதியானால், உடனே சிகிச்சையை துவங்க வேண்டும். ஒரு சிலருக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் சரியாகிவிடும்.
ஒரு சிலருக்கு மாத்திரைகள் மூலமும், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என்றால், ஓவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஒமேகா-3 கொழுப்புள்ள உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா மற்றும் பிராணாயாமமும் நோயை குணமாக்கும்.
உடற்பயிற்சி மற்றும் உணவு: முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியால் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். இன்சுலின் மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கும் பாலீஷ் செய்யப்பட்ட கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், தானியங்கள், உலர் விதைகள், முட்டை, சீஸ், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, பச்சை கீரைகள், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

Sunday 1 March 2015

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள்


பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்: சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நினைவுத்திறன் கூடும்: மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழகுசாதனப் பொருள்: குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

பித்தத்திலிருந்து விடுதலை பெற இயற்கை வழிகள்


உடலில் பித்தம் அதிகமாகச் சேர்வதன் மூலம் வாந்தி ,தலைசுற்றல் , மயக்கம் ,போன்றவை வரும்.
உடலிலிருந்து சேர்ந்திருக்கும் பித்தத்தை வெளியேற்ற சுலப வழி .
ஒரு நூறு மில்லிகிராம் தேனை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
அதனுடன் தோல் சீவிய இஞ்சியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு விட வேண்டும் .
ஒருநாள் முழுதும் ஊறிய பிறகு மறு நாளிலிருந்து தினமும்
முப்பது நாட்கள் காலையில் எழுந்துடன் வாய் கொப்பளித்து விட்டு அந்த இஞ்சி துண்டுகளிருந்து ஐந்து துண்டுகள் எடுத்து தேனுடன் வாயில் இட்டு நன்கு மென்று அதன் சாறை மட்டும் விழுங்கி விட்டு சக்கையை துப்பி விட வேண்டும் .இதனை முப்பது நாட்கள் கடைப் பிடித்தால் நமது உடலில் சூழ்ந்திருக்கும் பித்தம் முற்றிலுமாக விலகிக் குணம் கிடைக்கும்.

உடலில் சூட்டிலிருந்து விடுதலை பெற இயற்கை வழிகள்.!


உடல் சூட்டால் அவதிப் படுபவர்கள் பன்னீர் ரோஜாப்பூ இருபது எடுத்து அதன் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் .
அதனை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு விட்டு ,பத்து
ஏலக்காயைத் தோலுடன் அம்மியில் நசுக்கி ரோஜா
இதழ்களுடன் கொட்டி விட வேண்டும் .

அதன் பின்பு நூறு கிராம் சர்க்கரையைக் கொட்டி விட்டு அதனுடன் 250 மி.லி தேன் ஊற்றவும்.
நன்கு கிளறி அந்த டப்பாவை மூடியால் மூடவும்.
நாற்பத்தொரு நாள் வரை அப்பிடியே விடவும்.
42 - ம் நாள் முதல் தினமும் உணவு அருந்திய பின்பு காலை , மதியம் , இரவு என மூன்று வேளையும்
மூன்று தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு விலகி விடும்.