Sunday 28 December 2014

உங்கள் செல்போனில் IMEI நம்பர் இருப்பது தெரியும்,.? But ICE நம்பர் இருக்கிறதா?


நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.
சர்வ தேச அளவில் பின்பற்றக்கூடிய ஓரு நல்ல பழக்கத்தை நாமும் பின்பற்றவோம்.!

Sunday 14 December 2014

Function Key பயன்கள்


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.CMOS Setup இலும் பயன்படுகிறது.Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.CMOS Setup இலும் பயன்படுகிறது.Boot மெனுவுக்கு செல்ல
Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 –> open a new document in Microsoft Word.Ctrl + F2–> display the print preview window in Microsoft Word.
F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.
F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer )கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)Alt+F4 will Close all Programs.Ctrl+ F4 will close current Program.
F5
Reload or RefreshOpen the find, replace, and go to window in Microsoft WordPowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.
F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.
F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.
F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)Shift+F10 - Right Click ஆக செயல்படும்.
F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.
F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.Shift+F12 will Save MS WordCtrl+Shift+F12–MS Word print செய்ய பயன்படும்.

Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?


Android, iPhone, Windows Mobile போன்ற Smart Phone களை பயன்படுத்தும் நண்பர்கள் பலருக்கு அதில் உள்ள நிறைய Application-களை பிடித்து இருக்கும். அத்தோடு அவை கணினியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பதும் உண்டு. உண்மையிலேயே அவற்றை கணினியில் பயன்படுத்த முடியும் தெரியுமா? எப்படி என்று பார்ப்போம்.
pokki.com என்ற தளம் இந்த வசதியை வழங்குகிறது. இந்த தளத்தில் சென்று. உங்களுக்கு தேவையான Application-ஐ டவுன்லோட் செய்து நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
முதலில் Pokki Application – ஐ நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். Pokki.comமுகப்பிலேயே இதை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.
அதை இன்ஸ்டால் ஆகி ரன் ஆகும். இப்போது உங்கள் Task Bar – இல் அதன் icon வந்து இருக்கும்.
மேலே படத்தில் Pokki-யும், அதன் Window-வும் உள்ளது.
இப்போது குறிப்பிட்ட Application- ஐ நீங்கள் தெரிவு செய்து Download கொடுத்தால் அது உங்கள் Task Bar க்கு வந்து சேரும்.
உங்களுக்கு எப்போது, எதைப் பயன்படுத்த வேண்டுமோ அப்போது அந்த App மீது கிளிக் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.
Smartphone – களில் எப்படி செயல்படுமோ அதே போலவே செயல்படுகிறது.
சில பிரபலமான Pokki Apps.
1. Instagrille
பிரபலமான Instagram ஐ கணினியில் பயன்படுத்தும் அனுபவத்தை தருகிறது. மிகச் சிறப்பாக உள்ள இதில் ஒரு பிரச்சினை கணினியில் இருந்து நாம் படங்களை Upload செய்ய இயலாது. மற்றவர் படங்களை பார்த்து அதற்கு கமெண்ட் போடலாம். விரைவில் Upload வசதி வரும் என்று சொல்லப்படுகிறது.
2. Facebook
Smartphone- களில் எப்படி பேஸ்புக் இயங்குமோ அதே போலவே இயங்குகிறது. NewsFeed, Notifications, Messages, Friend Requests போன்றவற்றை நாம் எளிதாக காணலாம். புதிய Status போடலாம், அடுத்தவர்களுக்கு லைக், கமெண்ட் செய்யலாம்.
யாருடைய Profile-க்கும் நாம் செல்ல முடியாது. அதுதான் இதன் குறை. விரைவில் அதுவும் வரும் என்று நம்புவோம்.
3. Gmail
மிக அழகாக இருக்கும் இது தான் எனக்கு மிகவும் பிடித்த App. நாம் படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை Taskbar-இல் கட்டுவது அழகோ அழகு.
4. Tweeki
ஜிமெயில்க்கு அடுத்து அழகான Application. Timline, Interactions, Messages என ஒவ்வொன்றும் தனித் தனியாக காட்டப் படுகிறது.
இன்னும் நிறைய Applications உள்ளன. உங்களுக்கு எது தேவையோ அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் TaskBar- இல் Right Click செய்து Remove கொடுத்து விடலாம்.

Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?


என்ன தான் Pen Drive, Memory Card என்று வந்துவிட்ட போதிலும் இன்னும் நம்மில் பலர் CD, DVD – களை பயன்படுத்தி வருகிறோம். சில சமயங்களில் அவசரமாக CD அல்லது DVD ஒன்றை Burn செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்மிடம் எந்த மென்பொருளும் இருக்காது. அவ்வாறான சமயங்களில் எப்படி மென்பொருள் இல்லாமல் Burn செய்வது என்று பார்ப்போம்.
Windows 7, Vista:
1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும்.
4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து “Burn to Disc” என்பதை கொடுங்கள்.
5. இப்போது Next என்பதை கிளிக் செய்து Burn செய்ய ஆரம்பியுங்கள்.
6. CD or DVD க்கு உங்கள் பெயர் கொடுக்க வேண்டும் என்றால், Burn செய்யும் முன்பே Rename செய்து விடவும்.
Windows XP:
1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும்.
4. இப்போது இடது பக்கம் வரும் “Write these files to CD” என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது CD Writing Wizard பகுதிக்கு வருவீர்கள். அதில் Disc பெயர் கொடுக்கவும். அடுத்து Next கிளிக் செய்யுங்கள்.

வயதானவர்கள் கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள் ..!

உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் நிறைய தானிய வகைகள், சோயா. ஆனால் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்
குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள் ளிப் போட ஒவ் வொருவரின் உணவு முறையும் பெரும் காரண மாக அமைகிறது.
வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர் வம் இருக்காது. இதற்கு பல் வேறு காரணங் கள் உள்ளன. ருசி மற்றும் வாச னை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன
வயதான காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில், தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல்நலத்தை பாதிக்கும் சூழ்நிலைகளே.
மாறும் தேவைகள் :
1. வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
2. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..... வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி - வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி வைட் டமினில் இருக்காது.
3. தினமும் 6 முதல் 8 டம் ளர்கள் தண் ணீர் அருந் துவது மிகச்சிறந்த மருத் துவமாகும். ஏனெனில் வயதானவர் களுக்கு தா கம்கூட குறைந்துவிடும். இதனால் களைப்பும், தலை வலியும் ஏற்படும். ஊட்டச்சத்துகள் போன்றே தண்ணீரும் முக்கியமா னதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும் உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலும் தண்ணீரின் பங்கு அபரிமித மானது.
4. இறைச்சி வகைகளைக் கைவிட்டு காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். காய்கறிகளை மென்று தின்ன முடியாத முதியவர்கள் காய்கறிகளை சூப் செய்தும் அருந்தலாம். கீரைகள், பழங்களையும் சீராக சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகைப் பழத்தை உண்ணலாம். அதுவும் நீரிழிவு நோயாளியாக இருப்பின் பழ வகைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடலாம்.
5. பால், தயிர், மோர், போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நலம். அதற்காக அறவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல.
6. சர்க்கரை, காரம், உப்பு போன்றவை குறைவாக உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை தேவையை விட பாதி பங்கு அளவிற்கு உங்கள் உணவில் நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். இது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
7. வாரத்திற்கு இரு முறை கசப்பான உணவுகளான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம். வெந்தயம், மிளகு போன்றவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு அதனை உணவுப் பொருட்களில் சிறிது கலந்து உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.
8. கை, கால்களை சுத்தமாகவும், அடிபடாம லும் பார்த்துக்கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் போவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
9. குளிர்ச்சியான பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்துவிடுங்கள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம்.
10. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளுங்கள். அதுபோல் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு தானியம் சேர்ந்த உணவுப் பொருளை உட்கொள்வதும், சிறிது தூரம் நடை செல்வதும் சிறந்தது.
நமது உடலை நாம் உண்ணும் உணவின் மூலமே சரியாக வைத்துக்கொள்ள முடியும். அதை விடுத்து மாத்திரைகளையே உணவாக உட்கொள்ளும் அவசியம் நமக்கு வேண்டாமே.

Saturday 13 December 2014

தொடந்து கணினியில் அமர்ந்து செய்யும் வேலை செய்பவரா நீங்கள்..?


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.
கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.
20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.
இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.
தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
தேயிலை பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.
வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.